மதுரை மாவட்டம் கள்ளந்திரி ஐந்து கோயில் முத்தன் சுவாமி கண்மாயில் இன்று (மே. 16) காலை பாரம்பரிய மீன்பிடித் திருவிழா ஐந்து ஊர் அம்பலகாரர் தலைமையில் தொடங்கியது.
இந்த நிகழ்வில் கள்ளந்திரி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் கண்மாயில் இறங்கி மீன்களைப் பிடித்துச் சென்றனர்.குளங்கள் கண்மாய்கள் பாதுகாக்க வேண்டிய மனநிலை உண்டாகும். இயற்கை போற்றி பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் ஜாதி மத பேதமற்ற சமுதாயம் உருவாகும். நீர் ஆதாரங்களை முறையாக வருடந்தோறும் பராமரிக்க வேண்டும் என்கிற எண்ணம் உண்டாகும்
தமிழர்கள் வாழ்வில் மீன்பிடித்திருவிழா போன்ற அனைத்து விழாக்களும் மன மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுடன் நல்ல படிப்பனையும் தரும்
Namma Madurai
Local News & Updates