Namma Madurai App Namma Madurai App
லாரி மீது கார் மோதல் டிரைவர் பலி
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

லாரி மீது கார் மோதல் டிரைவர் பலி

392 days ago 21 Mar 2025

Share this story

அழகர்கோவிலில் தரிசனம்முடித்து காரில் திரும்பியபோது நத்தம் பறக்கும் பாலத்தில் பஞ்சராகி நின்ற லாரி மீது மோதியதில் டிரைவர் பலியானார். சென்னையைச் சேர்ந்த 6 பேர் காயமுற்றனர்.சென்னையைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குடும்பத்தினர் மதுரை வந்து வாடகை காரில் நேற்று காலை அழகர்கோவில் சென்றனர். காரை மதுரை காமராஜபுரம் மதியழகன் 38, ஓட்டினார்.
அங்கு தரிசனம் முடித்து மதியம் 2:00 மணிக்கு மதுரை நோக்கி நத்தம் பறக்கும் பாலத்தில் திரும்பினர். ரிசர்வ்லைன் அருகே கார் வேகமாக வந்த போது பாலத்தில் நடுவில் செங்கல் லாரி ஒன்று பஞ்சராகி நின்றது.
காரில் பயணித்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து நடந்ததும் காரின் 'ஏர் பேக்' செயல்பட்ட போதும் மதியழகன் இறந்துள்ளார். தல்லாகுளம் போக்குவரத்து குற்றப்புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.

Namma Madurai

Local News & Updates

More News