Namma Madurai App Namma Madurai App
நாளை முதல் மதுரை , தேனிக்கு வைகை குடிநீர் கிடைப்பதில் சிக்கல் நீர்வளத்துறை கைவிரிப்பு
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

நாளை முதல் மதுரை , தேனிக்கு வைகை குடிநீர் கிடைப்பதில் சிக்கல் நீர்வளத்துறை கைவிரிப்பு

4 days ago 30 May 2026

Share this story

மதுரை: கோடை தாக்கத்தால் நீர்மட்டம் மிகவும் குறைந்ததால் மதுரை மாநகராட்சி,
திண்டுக்கல், தேனி மாவட்ட குடிநீருக்காக மே 31 வரையே வைகை அணையில்
இருந்து குடிநீர் வழங்க முடியும் என நீர்வளத்துறை சார்பில் மூன்று
மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் வைகை அணையின் கீழ் உள்ள எடுப்பு அணையிலிருந்து
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (மதுரை , திண்டுக்கல், தேனி மாவட்டங்கள்)
மூலம் மதுரை மாநகராட்சி, தேனி, உசிலம்பட்டி நகராட்சி, ஆண்டிபட்டி, வடுகபட்டி
பேரூராட்சிகளுக்கு குடிநீருக்காக தினமும் தண்ணீர் எடுத்து பயன்படுத்தப்பட்டு
வருகிறது. தற்போது கோடை வெயில் தாக்கத்தால் அணையின் நீர்மட்டமும்
கொள்ளளவும் மிகவும் குறைந்துவிட்டது.
இவ்வகையில் 190 எம்.எல்.டி., குடிநீர் தினமும் தற்போது வினியோகிக்கப்படுகிறது.
எனவே வைகையில் ஏற்படும் பற்றாக்குறையை முல்லை பெரியாறு திட்டத்தில்
இருந்தும், உள்ளூர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சிறப்பு திட்டங்களில் குடிநீர்
பெற்றும் கோடையை சமாளிக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என்ற நம்பிக்கை உள்ளது
என்றார்.

Namma Madurai

Local News & Updates

More News