Namma Madurai App Namma Madurai App
நாளை யு.பி.எஸ்.சி., தேர்வு மதுரையில் 5713 பேர் பங்கேற்பு
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

நாளை யு.பி.எஸ்.சி., தேர்வு மதுரையில் 5713 பேர் பங்கேற்பு

11 days ago 23 May 2026

Share this story

மதுரை: மதுரையில் நாளை(மே 24) 16 மையங்களில் நடக்கும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.,) குடிமைப்பணிகள் முதன்மைத் தேர்வில் 5713 பேர் பங்கேற்கின்றனர். கலெக்டர் பிரவீன்குமார் கூறியதாவது: மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்காக சாய்தளம், சக்கர நாற்காலி, தரைத்தள அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தேர்வு மையங்களுக்கு காலை அமர்விற்கு 9:00 மணி, மதிய அமர்விற்கு 2:00 மணிக்கு வர வேண்டும். தேர்வர்கள் பென்சில், பேனா, இ--அட்மிட் கார்டு, போட்டோ, அடையாள அட்டை எடுத்து வரவேண்டும். அலைபேசி, டிஜிட்டல் கடிகாரம், தகவல் தொடர்பு சாதனங்கள், பைகளுக்கு அனுமதி இல்லை. சாதாரண 'அனலாக் விரிஸ்ட் வாட்ச்' மட்டும் அனுமதிக்கப்படும். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு பணிகளை கண்காணிக்க 5 நடமாடும் குழுக்கள், 16 உள்ளூர் ஆய்வு அலுவலர்கள், 16 உதவி மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது)பார்த்திபன், அலுவலர்கள் உடனிருந்தனர்.

Namma Madurai

Local News & Updates

More News