Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
மதுரை - சிந்தாமணி பகுதியில் கதிர் அருப்பு திருவிழா
76 days ago
31 Jan 2026
மதுரை தெப்பக்குளத்தில் நாளை நடைபெறும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு இன்று மதுரை சிந்தாமணி பகுதியில் பதினோராம் நாள் கதிர் அறுப்பு திருவிழா நடைபெற்றது.
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைந்துள்ள சிந்தாமணி பகுதியில் கதிர் அருப்பு திருவிழா நடை பெற்றது திருவிழாவில் மீனாட்சி அம்மன் நெல் பயிர்களை அறுத்து கதிர் அறுத்தல் தொடங்கி வைப்பது வழக்கம் இத்திருவிழா 1940களில் இருந்து சிந்தாமணி விவசாயிகள் ஆடி மாதம் நெற்பயிர்களை பயிரிட்டு தை மாதம் கதிர் அறுப்பது வழக்கம் சிந்தாமணி விவசாயிகள் தை மாதம் கதிர் அருப்பதற்கு முன்னர் அருள்மிகு மீனாட்சி அம்மன் வருகை தந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து கதிர் அறுத்து கதிர் அறுக்கும் பணியை தொடங்கி வைப்பார்கள் அதற்கடுத்து சிந்தாமணி விவசாயிகள் நெற்பயிரை அறுக்க ஆரம்பிப்போம் என்றும் அந்த மாதம் மட்டும் எங்களுக்கு விவசாயம் அமோக விளைச்சல் இருக்கும் எனவும் இது சரியாக தெப்பத் திருவிழாவுக்கு முதல் நாள் நடைபெறும் என்பது வழக்கம்.
இந்த ஆண்டு நடைபெற்ற கதிர் அறுப்பு திருவிழாவில் மதுரை மீனாட்சி சொக்கநாதர் தங்க பல்லாக்கில் கதிர் அறுப்பு மண்டபம் எழுந்தருளினர்.
இதனை தொடர்ந்து சிந்தாமணி பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் சிந்தாமணி சாமநத்தம் பனையூர் வில்லாபுரம் அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து சிந்தாமணி பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் சிந்தாமணி சாமநத்தம் பனையூர் வில்லாபுரம் அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Namma Madurai
Local News & Updates