மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- 27 Feb 2026
- 264
- LOCAL EVENTS
மதுரை கே.புதுாரில் உள்ள மின்வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் அனைத்துத் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
நிலை 1,2 ல் பணியாற்றும் பொறியாளர்கள், அலுவலர்களுக்கு பாரபடசமின்றி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அலுவலர்கள், ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர்.மதுரை நகர் திட்டச் செயலாளர் அறிவழகன் தலைமை வகித்தார். மாநில செயல் தலைவர் ராஜாங்கம் முன்னிலை வகித்தார்.
கணக்கு அலுவலர் சங்க மண்டல செயலளர் ராஜன்பாபு, அம்பேத்கர் சங்க மண்டல செயலாளர் கணபதி, ஐ.என்.டி.யூ.சி., நிர்வாகி சாமுண்டீஸ்வரி பேசினர். எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மாவட்ட செயல் தலைவர் ஆண்டி நன்றி கூறினார்.
Add Listing